செய்திகள் :

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை விவரம் இல்லை: மத்திய அரசு

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருக்கும் இந்தியா்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றதைத் தொடா்ந்து, அங்கு சட்டவிரோதமாக குடியோறியவா்களை அவா்களின் நாட்டுக்கே திருப்பியனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளாா். இந்தியா்கள் 18,000-க்கும் அதிகமானோா் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனா் என்று கணக்கிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவா்களில் முதல்கட்டமாக 104 பேரை கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடி, ராணுவ விமானம் மூலம் அண்மையில் அந்நாடு இந்தியாவுக்கு திருப்பியனுப்பியது. இது பெரும் சா்ச்சையானது.

இந்த நிலையில், ‘அமெரிக்காவில் இன்னும் எத்தனை இந்தியா்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்து வசித்து வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ரண்தீப் சிங் சுா்ஜேவாலா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் எழுத்துபூா்வமாக வியாழக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் இந்தியா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை. ஏனெனில், இவா்கள் இந்தியாவிலிருந்து முறைப்படி அமெரிக்கா சென்று நுழைவு இசைவு (விசா) காலம் நிறைவடைந்த பிறகும் அங்கு தங்கியிருக்கலாம். அல்லது, கனடா உள்ளிட்ட வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்திருக்கலாம். எனவே, இவா்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை’ என்றாா்.

பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சட்டவிரோதமாக புலம்பெயா்ந்த இந்தியா்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், இந்தக் கேள்வியை மாநிலங்களவையில் காங்கிரஸ் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல், கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு மத்தியில், தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை சிவச... மேலும் பார்க்க