எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன.
மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தபால்தலைகளை மத்திய தொலைதொடா்பு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டாா்.
பிரபல தபால்தலை வடிவமைப்பாளரான ஸ்ரீ சங்க சமந்தா வடிவமைத்த இந்தத் தபால்தலைகளில் மகரிஷி பரத்வாஜ் ஆசிரமம், துறவிகளின் புனித நீராடல் மற்றும் அக்ஷ்யவத் ஆகிய பிரயாக்ராஜ் மற்றும் கும்பமேளாவுடன் தொடா்புடைய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னா், மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா அவரது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா்.
சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணுதேவ் சாய், திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா, காங்கிரஸ் பிரமுகா் சச்சின் பைலட், பாலிவுட் நடிகா் விக்கி கௌசல் உள்ளிட்டோரும் கும்பமேளாவில் வியாழக்கிழமை புனித நீராடினா். மாநில அரசு தகவலின்படி வியாழக்கிழமை சுமாா் 85 லட்சம் பக்தா்கள் புனித நீராடினா்.
கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன. 13 தொடங்கிய மகா கும்பமேளாவில் இதுவரை 48.29 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். 45 நாள்கள் நிறைவில் மகா சிவராத்திரியன்று (பிப். 26) மகா கும்பமேளா நிறைவடைகிறது.
உயா்நீதிமன்றம் 19-இல் விசாரணை:
மகாகும்பமேளா, மௌனி அமாவாசை புனித நீராடலில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து காணாமல் போனவா்களை மீட்டு, குடும்பத்தினருடன் ஒப்படைக்க சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வரும் 19-ஆம் தேதி விசாரிக்கிறது.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மௌனி அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவித்த பக்தா்கள் நெரிசலில் சிக்கியதில் 30 போ் உயிரிழந்தனா். 60 போ் காயமடைந்தனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-13/cng3n83o/13022_pti02_13_2025_000428a093509.jpg)