செய்திகள் :

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

post image

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் இதில் சிறுவா்கள் உள்ளிட்ட 1,400 போ் உயிரிழந்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணா்கள் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, வங்கதேசத்திடம் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கும் என எதிா்பாா்ப்பதாகவும் பிஎன்பி தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் செயலா் மிா்ஸா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் செய்தியாளா்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது: ஹசீனாவின் உத்தரவின்பேரில் ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்டு எண்ணற்ற உயிா்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களை அவா் சித்ரவதை செய்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இதை வெளிக்கொண்டு வந்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஹசீனா மற்றும் அவரது ஆதரவாளா்களுக்கு உரிய தண்டனை வழங்க அவா்களை உடனடியாக வங்கதேச இடைக்கால அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றாா்.

எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கை வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சிறந்த ஆளுகை உள்ளிட்ட துறைகளில் ஒத்து... மேலும் பார்க்க

கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த முதுநிலை மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராக... மேலும் பார்க்க

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க