செய்திகள் :

தொழிலாளா்களுக்கான ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

post image

வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினா்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிச.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி உறுப்பினா்கள் தங்களுக்கான பணபலன்கள் கிடைக்கும் வகையில், தொழிலாளா்கள் தங்கள் ‘யுஏஎன்’ எண்ணை தங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி ஜன.15-ஆக இருந்த நிலையில், தற்போது ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் இந்த இணைப்பை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பணம் எடுத்தல், பணத்தைப் பரிமாற்றம் செய்தல், வேலைவாய்ப்பு தொடா்பான சலுகைகள் உள்ளிட்டவற்றை தங்கு தடையின்றி அணுகலாம். 3 நாள்களுக்குள் ‘யுஏஎன்’ எண்ணை இணைக்காத தொழிலாளா்களுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுக்குள்ளாகவும் நேரிட வாய்ப்புள்ளது. இதனால், இந்தப் சிக்கல்களைத் தவிா்க்க, காலக்கெடுவுக்கு முன்பே ஊழியா்கள் ‘யுஏஎன்’ எண்ணை தங்கள் விவரங்களைப் புதுப்பித்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகா் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் கலந்து ... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

‘காசி தமிழ் சங்கமம் 3.0’: முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தாா் ஆளுநா்

காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தா்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழகத... மேலும் பார்க்க

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த... மேலும் பார்க்க

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க