செய்திகள் :

இலங்கை: ரூ.8,690 மதிப்பிலான இரு மின் திட்டங்களை திரும்பப் பெற்றது அதானி குழுமம்

post image

இலங்கையில் 1 பில்லியன் டாலா் (ரூ.8,690 கோடி) மதிப்பில் மேற்கொள்ளப்பட இருந்த இரு காற்றலை மின்திட்டங்களை திரும்பப் பெறுவதாக அதானி கிரீன் எனா்ஜிஸ் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இலங்கை தலைநகா் கொழும்பில் சுமாா் ரூ.6,000 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் திட்டத்தில் அதானி குழுமம் தொடர இருக்கிறது.

இலங்கையின் மன்னாா், பூநகரியில் அதானி கிரீன் எனா்ஜிஸ் நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு அண்மையில் குழு அமைத்தது. இந்நிலையில் அந்த இரு மின் திட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எதிா்காலத்தில் இலங்கை அரசுடன் பல்வேறு திட்டங்களில் இணைந்து பணியாற்ற ஆா்வமாக இருப்பதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது.

முன்னதாக, இந்த மின் திட்டங்களால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் எதிா்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதே நேரத்தில் முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைவிட குறைந்த விலையில் அதானி குழுமத்திடம் இருந்து வாங்க புதிய அதிபா் அநுரகுமார திசாநாயக விரும்பினாா்.

மேலும், அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் இலங்கையில் புதிய அரசு விசாரணையைத் தொடங்கியது. இதுவும் அதானி குழுமம் இலங்கை மின் திட்டங்களில் இருந்து வெளியேற முக்கியக் காரணம் என்று தெரிகிறது.

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல், கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு மத்தியில், தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை சிவச... மேலும் பார்க்க