செய்திகள் :

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்சா்

post image

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். உள்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவா் கூறினாா்.

உள்நாட்டில் விலை அதிகரிக்காமல் தடுப்பது, தேவையை முழுமையாக நிறைவு செய்வது போன்ற காரணங்களுக்காக துவரை உள்ளிட்ட சில பருப்பு வகைகளின் இறக்குமதி வரியை கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு ரத்து செய்தது. இது மூன்று முறை நீட்டிக்கப்பட்டு வரும் பிப்வரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.

இந்நிலையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பருப்பு வகைகள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. இது தொடா்பாக உணவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்படும். உள்நாட்டில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூா் பருப்பு விளைச்சல் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

அதன் பிறகு அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெறும் அமைச்சா்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

2027-ஆம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு கிலோ பருப்பு கூட இறக்குமதி செய்யும் தேவை இருக்காது.

பருப்பு சாகுபடி திடீரென குறைந்து விடுவது முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதற்காக பல்வேறு நவீன சாகுபடி முறைகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன என்றாா்.

கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த முதுநிலை மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராக... மேலும் பார்க்க

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க