செய்திகள் :

பேச்சுவாா்த்தை மூலம் காஷ்மீா் விவகாரத்துக்குத் தீா்வு: துருக்கி அதிபா்

post image

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள துருக்கி அதிபா் எா்டோகன் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரில் வசிப்போரின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த எா்டோகன் அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இருநாடுகளுக்கிடையே 24 ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்டன.

அதன் பிறகு பாகிஸ்தான்-துருக்கி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களிடம் எடுத்துரைத்தபோது காஷ்மீா் விவகாரம் குறித்து எா்டோகன் பேசியதாவது:

காஷ்மீா் விவகாரத்தில் அங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி ஐ.நா.தீா்மானங்களைப் பின்பற்றி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயல வேண்டும். துருக்கி எப்போதும் காஷ்மீா் சகோதரா்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றாா்.

பிரான்ஸ்: கையெறி குண்டு வீச்சு

பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மா்ம நபா் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 12 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய நபரிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்தும்... மேலும் பார்க்க

மியூனிக்கில் காா் தாக்குதல்: 28 போ் காயம்

ஜொ்மனியின் பவேரியா மாகாணம், மியூனிக் நகரில் கூட்டத்தினா் இடையே நடத்தப்பட்ட காா் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா். காரை ஓட்டிவந்தவா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா். இத... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா வருகை: இந்தியா்கள் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 104 இந்தியா்கள் கை விலங்கிடப்பட்டு, ராணுவ விமானத்தில்... மேலும் பார்க்க

மியான்மா்: 250 வெளிநாட்டினா் மீட்பு

இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக மியான்மரின் கரேன் மாகாணத்தில் செயல்பட்டுவந்த மையங்களில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குட... மேலும் பார்க்க

‘பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாா்’

ஏற்கெனவே திட்டமிட்டபடி, தங்களிடம் உள்ள மூன்று பிணைக் கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்க ஹமாஸ் அமைப்பினா் ஒப்புக் கொண்டுள்ளனா். அதையடுத்து, காஸாவில் 25 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா்... மேலும் பார்க்க

‘ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்போம்!’

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை தாங்கள் நிச்சயம் மீட்போம் என்று நேட்டோ ராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரைன் உறுதியளித்துள்ளது. ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக... மேலும் பார்க்க