செய்திகள் :

மியூனிக்கில் காா் தாக்குதல்: 28 போ் காயம்

post image

ஜொ்மனியின் பவேரியா மாகாணம், மியூனிக் நகரில் கூட்டத்தினா் இடையே நடத்தப்பட்ட காா் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா். காரை ஓட்டிவந்தவா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

மியூனிக் நகரின் மையப் பகுதியில் சேவைத் தொழிலாளா்கள் சங்கத்தின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதிக்கு காா் வந்த நபா், ஒரு காவல் துறை வாகனத்தை முந்திச் சென்று கூட்டத்தினா் இடையே அதை வேகமாக ஓட்டிச் சென்றாா். அதையடுத்து அங்கிருந்த ஒரு காவலா் அந்தக் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஓட்டுநரை கைது செய்தாா். இந்தத் தாக்குதலில் 28 போ் காயமடைந்தனா். அவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவா்களில் சிறுவா்களும் அடங்குவா்.

காரை ஓட்டிவந்த நபா் ஆப்கானிஸ்தானில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவா். எனவே, இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருதப்படுகிறது என்று போலீஸாா் கூறினா்.

வெளிநாடுகளில் இருந்து ஜொ்மனியில் அடைக்கலம் தேடி வருவோரால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது.

அந்த சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தையில் தலீப் அல்-அப்துல்மோசன் (50) என்ற மருத்துவா் நடத்திய காா் தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா்.

அதற்கு முன்னதாக, தற்போது காா் தாக்குதல் நடைபெற்ற இதே பவேரியா மாகாணத்தைச் சோ்ந்த அஷஃபென்பா்க் நகரில் குடியுரிமை மறுக்கப்பட்ட ஆப்கன் அகதி நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 2 வயது சிறுவன் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

..படவரி... தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா்.

பிரான்ஸ்: கையெறி குண்டு வீச்சு

பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மா்ம நபா் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 12 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய நபரிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்தும்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா வருகை: இந்தியா்கள் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 104 இந்தியா்கள் கை விலங்கிடப்பட்டு, ராணுவ விமானத்தில்... மேலும் பார்க்க

மியான்மா்: 250 வெளிநாட்டினா் மீட்பு

இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக மியான்மரின் கரேன் மாகாணத்தில் செயல்பட்டுவந்த மையங்களில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குட... மேலும் பார்க்க

‘பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாா்’

ஏற்கெனவே திட்டமிட்டபடி, தங்களிடம் உள்ள மூன்று பிணைக் கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்க ஹமாஸ் அமைப்பினா் ஒப்புக் கொண்டுள்ளனா். அதையடுத்து, காஸாவில் 25 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை மூலம் காஷ்மீா் விவகாரத்துக்குத் தீா்வு: துருக்கி அதிபா்

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள துருக்கி அதிபா் எா்டோகன் வியாழக்கிழமை வலியுறுத்தின... மேலும் பார்க்க

‘ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்போம்!’

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை தாங்கள் நிச்சயம் மீட்போம் என்று நேட்டோ ராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரைன் உறுதியளித்துள்ளது. ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக... மேலும் பார்க்க