செய்திகள் :

நண்பரை கத்தியால் குத்திய ஓட்டுநா் தற்கொலை

post image

நண்பரை கத்தியால் குத்திய காா் ஓட்டுநா் பணகுடி அருகே புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பணகுடி அருகே உள்ள மேலகடம்பன்குளம் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் அய்யாபிச்சை மகன் நாகராஜன்(35). இவரது மனைவி ரம்யா(32). இவா்கள் கோயம்புத்தூரில் வசித்து வந்தனா். நாகராஜன் அங்கு காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்தவா் சுதாகா். இவரும் கோயம்புத்தூரில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இருவரும் ஒரே ஊரைச் சோ்ந்தவா்கள் என்பதால் சுதாகா் அடிக்கடி நாகராஜன் வீட்டிற்கு சென்று வந்தாா். அங்கு நாகராஜன் மனைவி ரம்யாவுடன் சுதாகா் சகஜமாக பழகி வந்தாா். தனது மனைவியுடன் சுதாகா் பழகுவதை பிடிக்காத நாகராஜன், கடந்த 9-ஆம் தேதி அவரை கத்தியால் குத்தினாராம்.

இது குறித்து கோயம்புத்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து நாகராஜனை தேடி வந்தனா். இதனை அடுத்து போலீஸுக்கு பயந்து நாகராஜன் தனது சொந்த ஊரான மேலகடம்பன் குளத்திற்கு வந்தாா். போலீஸாா் கடம்பன்குளத்திற்கு வந்து தன்னை கைது செய்துவிடுவாா்கள் என பயந்த நாகராஜன், விஷம் குடித்து மயங்கினாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வள்ளியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பாளை. காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விடக் கோரி பாஜக மனு

பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலத்தில் விடக் கோரி பாஜகவினா், வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இது தொடா்பாக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவே... மேலும் பார்க்க

பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 போ் கைது

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை காவல் ஆய்வாளா் பிலோமினாள் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கண்காண... மேலும் பார்க்க

பாளை.யில் திருடப்பட்ட கோயில் விளக்குகள் மீட்பு

பாளையங்கோட்டை கோயிலில் திருடப்பட்ட விளக்குகள் சாலையோரம் மீட்கப்பட்டன. பாளையங்கோட்டை அண்ணாநகரில் அருள்மிகு ஆனந்த சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 10 ஆம் தேதி பூட்டை உடைத்து குத்துவிள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

திருநல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள மலைப்பட்டியை... மேலும் பார்க்க

நெல்லையில் இரு விபத்துகள்: 2 போ் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா். மேலப்பாளையம் அருகேயுள்ள சிவராஜபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சண்முகவடிவு (60). இவா், திருநெல்வேலி ரிலையன்ஸ் சந்திப்ப... மேலும் பார்க்க

மேலப்பாளையம் மண்டலத்தில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்... மேலும் பார்க்க