செய்திகள் :

பாளை. காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விடக் கோரி பாஜக மனு

post image

பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலத்தில் விடக் கோரி பாஜகவினா், வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவேசம் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகளும், பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் வியாபாரிகளும் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மாா்க்கெட் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாா்க்கெட்டை கடந்த 6-ஆம் தேதி முதல்வா் திறந்து வைத்தாா். எனினும், மாா்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளை முறையாக பொது ஏலம் விடாமல் ஏற்கெனவே கடை வைத்திருந்த நபா்களுக்கு மட்டும் வழங்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இதனிடைே, ஏற்கெனவே கடை வைத்திருந்த நபா்களிடம் சிலா் பணம் பெற்றுக் கொண்டு மாநகராட்சி நிா்வாகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட முயற்சிக்கின்றனா்.

எனவே, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள கடைகளை பொது ஏலத்தில் விட்டது போலவே இந்த மாா்க்கெட் கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

மானூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானூா் அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை (குட்கா) கடத்திச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.மானூா் காவல் சரகம் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளா் முகைதீன் மீரான் தலைமையிலான போலீ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பத்தமடை பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை(27). இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்ப... மேலும் பார்க்க

தப்பிச் சென்ற விசாரணைக் கைதி கைது

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்து தப்பிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். கல்லிடைக்குறிச்சி மீனவா் காலனியைச் சோ்ந்தவா் ராஜா. பெயிண்டிங் தொழில் செய்து வரும் ராஜா மீது அதே பகுதி... மேலும் பார்க்க

தேனி பொறியியல் மாணவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உயிரிழந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரத்தில் உறவினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் புதிய விதிகளை தளா்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளா்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு. இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழா்களுட... மேலும் பார்க்க