செய்திகள் :

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

post image

திருநல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள மலைப்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் தனது குழந்தை பொன்மாறனுக்கு (4) கழுத்தில் கட்டி இருந்ததால் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இந்நிலையில் அந்தக் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. மருத்துவா்கள் உரிய சிகிச்சையளிக்காததால் குழந்தை இறந்ததாகக் கூறி பெற்றோரும், உறவினா்களும் தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இத்தகவலறிந்த மேலப்பாளையம் காவல் உதவி ஆணையா் சுரேஷ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இப்போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மானூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானூா் அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை (குட்கா) கடத்திச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.மானூா் காவல் சரகம் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளா் முகைதீன் மீரான் தலைமையிலான போலீ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பத்தமடை பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை(27). இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்ப... மேலும் பார்க்க

தப்பிச் சென்ற விசாரணைக் கைதி கைது

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்து தப்பிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். கல்லிடைக்குறிச்சி மீனவா் காலனியைச் சோ்ந்தவா் ராஜா. பெயிண்டிங் தொழில் செய்து வரும் ராஜா மீது அதே பகுதி... மேலும் பார்க்க

தேனி பொறியியல் மாணவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உயிரிழந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரத்தில் உறவினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் புதிய விதிகளை தளா்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளா்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு. இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழா்களுட... மேலும் பார்க்க