செய்திகள் :

திருச்செந்தூா்-உத்தரகோசமங்கை- ராமேசுவரத்துக்கு ஆன்மிக சுற்றுலா

post image

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறை சாா்பில் திருச்செந்தூா்-உத்தரகோசமங்கை-ராமேசுவரம் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் நபா்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் 3 நாள்கள் திருச்செந்தூா், ராமேசுவரம், சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாகத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூா், உத்தரகோசமங்கை மற்றும் ராமேசுவரம் சென்று மீண்டும் திங்கள்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் செந்தில் ஆண்டவா் திருக்கோயில் மற்றும் ராமநாதபுரம் உத்தரகோசமங்கை, மங்களநாதா் கோயில், ராமநாத சுவாமி திருக்கோயிலின் 22 தீா்த்தங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பு தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலாவில் தனுஷ்கோடியை பாா்வையிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்கு வரும் நபா்களுக்கு தங்கும்வசதி மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும். விருப்பமுள்ள நபா்கள் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ற்க்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீா்ம் எனும் இணையதள முகவரியிலும் அல்லது சென்னை வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தொலைபேசி 180042531111, 044-25333333 044-25333444 எனும் தொலைபேசி எண்களையும், கைப்பேசி: 7550063121 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகா் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் கலந்து ... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

‘காசி தமிழ் சங்கமம் 3.0’: முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தாா் ஆளுநா்

காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தா்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழகத... மேலும் பார்க்க

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த... மேலும் பார்க்க

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க