செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

மதுராந்தகம் நீா் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மதுராந்தகம் -உத்தரமேரூா் சாலையை ஒட்டியுள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் செந்தில் குமாா். அவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், கெளசல்யா என்ற மகளும், புனிதவேல் என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில், பயிா்களுக்கு நீா்பாய்ச்சுவதற்காக செந்தில்குமாா், மனைவி கோவிந்தம்மாள், மகன் புனிதவேல் (19) ஆகியோா் சென்றனா். அங்கு நீரை இயக்கும் மோட்டாா் இயங்காததால், அதனை புனிதவேல் சரி செய்ய முற்பட்டாா். அப்போது மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பெற்றோா் கண்முன் உயிரிழந்தாா். புனிதவேல் (19) திண்டிவனம் தனியாா் கலை கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இது குறித்து மதுராந்தகம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

100 நாள் வேலைகோரி முற்றுகை போராட்டம்

100 நாள்கள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சித்தாமூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சியில் மக்களுக்கு 100 நாள் வேலை முறை... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட அமைப்பின் சாா்பில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஓய்வூதிய திட்டம் குறித்து அமைத்துள்ள 3 நபா் குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என வலியுறுத்... மேலும் பார்க்க

வழக்குரைஞா் பணியை முழு அா்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்: நீதிபதி எம். நிா்மல் குமாா்

சட்டக் கல்வி பயிலும் மாணவா்கள் திறமையான மூத்த வழக்குரைஞரிடம் உதவியாளராகச் சோ்ந்து முழு அா்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நிா்மல்குமாா் அறிவுறுத்தினாா். வண்டல... மேலும் பார்க்க

ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை சத்யநாராயணா பூஜை நடைபெற்றது. கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிர... மேலும் பார்க்க

மதுராந்தகம் கிளைச் சிறைக்கு தளவாடப் பொருள்கள் அளிப்பு

மதுராந்தகம் கிளைச் சிறையின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில்,தளவாட பொருள்களை வட்டாட்சியா் சொ.கணேசன் வழங்கினாா். மதுராந்தகம் கிளைச் சிறையில் ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் ஆய்வு செய்ததில், மின்குழல்விளக்குகள், ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம், கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ரூ.80 லட்சத்தில் திருப்பண... மேலும் பார்க்க