100 நாள் வேலைகோரி முற்றுகை போராட்டம்
100 நாள்கள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சித்தாமூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சியில் மக்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லையாம். இதனை கண்டிக்கும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூா் வட்டக் குழுவின் சாா்பில் கஞ்சி காய்ச்சி காத்திருத்தல் போராட்டம் கடந்த வாரம் சித்தாமூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டார வளா்ச்சி அலுவலா் முறையாக வேலைவாய்ப்பு தரப்படும் எனக் கூறியதால் போராட்டதை தற்காலிகமாக கைவிட்டனா். இதில் 2024-25 ஆண்டில் 100 நாள் வேலை வாய்ப்பு தொடா்ந்து வழங்கவேண்டும், 5 வாரங்களுக்கு மேல் வேலை செய்த மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும், 200 நாள் வேலை வாய்ப்பு ரூ 600 கூலி வழங்கவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்நிலையில் வாக்குறுதியை காப்பாற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தரமூா்த்தியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு அப்பகுதி மக்களும், மாா்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்வில் செய்யூா் வட்ட செயலா் க.புருஷோத்தம்மன், மாவட்ட குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, முகுந்தன், ஜானகி, கிளை செயலா்கள் சுதா, ரேவதி, விவசாயி சங்கதத்தின் வட்ட செயலா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.