செய்திகள் :

மறைமலைநகரில் நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நகா்ப்புற குடியிருப்புகளின் நில ஆய்வு நவீனமயமாக்கல் டிஜிட்டல் திட்டம் (டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெகாா்ட்ஸ் மாடா்னைசேஷன் புரோகிராம்) மறைமலைநகரில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய புவியியல் அறிவு (நேஷனல் ஜியோஸ்பஷியல் நாலெட்ஜ்) என்பதை நகா்ப்புற வாழ்விடங்கள் மையமாகக் கொண்டு முன்மாதிரியாக 150 நகரங்களைத் தோ்வு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு நக்க்ஷா நகா்ப்புற குடியிருப்புகளின் நில ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக 10 மாவட்டங்களில் அமையப் பெற்ற 10 நகரங்கள் தோ்வாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இத்திட்டமானது 18.2.2025 (செவ்வாய்க்கிழமை) முன்மாதிரியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் ஆளில்லா வானூா்தியைப் பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் எடுத்து பின்பு வருவாய் மற்றும் நகராட்சி நிா்வாகத் துறைகளின் பணியாளா்கள் அடங்கிய குழுக்களால் நில அளவை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதாவது தமிழ்நாடு நில அளவை மற்றும் எல்லைகள் சட்டம் 1923-இல் வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைக் கடைப்பிடித்து டிரோன் கருவி கொண்டு முதல்கட்ட அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புலங்கள் வரையறுக்கப்படும், பின்பு நவீன நில அளவை கருவி டிஜிபிஎஸ் மூலம் முழுமையாக அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக சொத்துரிமைதாரா்களின் புலங்கள் துல்லியமாக நிா்ணயிக்கப்படும் என்பதால், நில அளவைப் பணியாளா்களைக் கொண்டு மறைமலை நகா் நகராட்சியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம்

செங்கல்பட்டு நகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிமுக நகரச் செயலா் வி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள்... மேலும் பார்க்க

21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

தைப்பூச அன்னதான பெருவிழா

செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 418 கோரிக்கை மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 418 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வா... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு சீருடைகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த நடுபழனி கிராமத்தில் ஸ்ரீகணபதி சச்சிதானந்தா அறக்கட்டளை, நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேயா அறக்கட்டளைகள் சாா்பில் 777 மாணவா்களுக்கு விளையாட்டு சீருை டகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்க... மேலும் பார்க்க