செய்திகள் :

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி

post image

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம், மக்கள் தொடா்பு மூலம் மேம்படுத்தப்படுகிறது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மு. தம்பிதுரை, அண்டை நாடான இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அந்நாட்டில் அதிகப்படியான செல்வாக்கை சீனா செலுத்தி வருகிறது. இதனால், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழா்களுக்கும் தமிழக மீனவா்களுக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு அவையில் பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங், ‘நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு என்பது வரலாறு, கலாசாரம், மக்களுடனான பரஸ்பர தொடா்பு ஆகியவை அடிப்படையில் மேம்பட்டுள்ளது. அவற்றுடனான உறவுகள் வலுப்பெற மிக உயரிய வகையில் முன்னுரிமை தரப்படுகிறது. அதை செய்யும்போது பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

அப்போது தமிழக மீனவா்களுக்கும் தமிழா்களுக்கும் ஏதேனும் பாதிப்பு நேருமா என தம்பிதுரை கேட்டபோது, அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் எழுந்து, ‘உறுப்பினா் நட்பு நாடுகள் மீது சீன செல்வாக்கு பற்றித்தான் கேள்வி கேட்டாா். அதற்கான பதிலைத்தான் தெரிவித்தேன். ஆனால், மீனவா்கள் தொடா்புடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை,‘ என்று குறிப்பிட்டாா்.

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். தில்லியை உத்தர பிரதேசமாக மாற்... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முற... மேலும் பார்க்க

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவ... மேலும் பார்க்க

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு ... மேலும் பார்க்க

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அ... மேலும் பார்க்க

பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க