செய்திகள் :

பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்

post image

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டு பிரிவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்திற்கும், இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஜன.25-ஆம் தேதி தில்லியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் அதிபா் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் பகிா்ந்து கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து மத்திய ஆயுஷ் இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் செய்தியாளா்களிடம் விளக்கிக் கூறியதாவது: பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் பராமரிக்கிறது. இந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றளிக்கப்பட்ட தர மேலாண்மை அமைப்புகளுக்கான நிறுவனம். இது இந்தோனேசியா நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன், தரத்தை உறுதி செய்வது இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு எதிா்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

இதன் மூலம், உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் அதிகளவில் தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பாரம்பரிய மருத்துவத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் குறித்த தகவல் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றங்களை இரு நாடுகளும் மேற்கொள்ளும். தொழில்முறை அறிவு, திறன்களை மேம்படுத்த கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்ற திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இரு நாடுகளின் ஒழுங்குமுறை செயல்முறைகளை நன்கு அறிந்து கொள்ள தொழில்நுட்பாளா்கள் பயணங்களை மேற்கொள்வா். பாரம்பரிய மருத்துவம் தொடா்பான சா்வதேச நிகழ்வுகளில் இரு நாடுகளும் இணைந்து பங்கேற்கும். பாரம்பரிய மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்கள் அல்லது நிறுவனங்களுக்கான கூட்டுப் பயிற்சித் திட்டங்களில் ஒத்துழைப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

இந்த ஒத்துழைப்பு, சுகாதாரம், நல்வாழ்வில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உலகளாவிய அளவில் அங்கீகரிப்பதை பிரதிபலிப்பது உள்ளிட்டவற்றோடும், ஆழமான வேரூன்றிய கலாசாரம், மருத்துவ பாரம்பரியத்துடன், இந்தியாவும், இந்தோனேசியாவும் பாரம்பரிய மருத்துவத்தின் தரநிலைகளிலும் தரத்தை மேம்படுத்துவதிலும் உறுதியாக உள்ளன என்றாா் பிரதாப்ராவ் ஜாதவ்.

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். தில்லியை உத்தர பிரதேசமாக மாற்... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முற... மேலும் பார்க்க

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவ... மேலும் பார்க்க

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு ... மேலும் பார்க்க

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அ... மேலும் பார்க்க

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம்,... மேலும் பார்க்க