செய்திகள் :

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

post image

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திமுக எம்.பி. இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தாா். நிதியற்றவா்களுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கடன் வரம்பை அரசு ரூ.20 லட்சமாக உயா்த்தியுள்ளதா என்றும் அதன் மூலம் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மூலதனத்துக்கான அணுகல் அதிகரித்துள்ளதா என்றும் கடந்த 3 ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை எத்தனை என்றும் அவா் கேட்டிருந்தாா்.

இவற்றுக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌத்ரி வியாழக்கிழமை அளித்துள்ள பதிலில், முத்ரா திட்டத்தின் தருண் பிரிவின் கீழ் கடன்களைப் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு தருண் ப்ளஸ் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அவா்களுக்கு ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக கூறியுள்ளாா்.

பெண்கள் மற்றும் சிறுபான்மை தொழில் முனைவோா்களுக்கு திறம்படச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், விண்ணப்பதாரரின் தரவுகளின் டிஜிட்டல் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல்கள் பெறப்பட்டு தனிநபா்கள் மற்றும் வணிகங்களுக்காக ஜன்சமா்த் இணையதளம் மற்றும் பொதுத்துறை வங்கிக் கடன்கள் 59 நிமிடங்களில் வழங்குவதன் மூலம் காகித ஆவணங்கள் சமா்ப்பிப்பதையும், நேரில் வருவதன் அவசியமும் குறைகின்றன என அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

2022-2023, 2023-24, 2024-25 நிதியாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் முத்ரா திட்டத்தின் ஷிஷு பிரிவில் ரூ. 33,938.01 கோடி மதிப்புடைய 90,70,639 கடன்களும், கிஷோா் பிரிவில் ரூ.74,901.84 கோடி மதிப்புடைய 75,08,765 கடன்களும், தருண் பிரிவில் ரூ. 24,670.48 கோடி மதிப்புடைய 2,66,497 கடன்களும், தருண் பிளஸ் பிரிவில் ரூ. 32.51 கோடி மதிப்புடைய 228 கடன்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். தில்லியை உத்தர பிரதேசமாக மாற்... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முற... மேலும் பார்க்க

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவ... மேலும் பார்க்க

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு ... மேலும் பார்க்க

பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம்,... மேலும் பார்க்க