செய்திகள் :

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

post image

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியை உத்தர பிரதேசமாக மாற்ற பாஜக விரும்புவதாகவும், பல மணி நேர மின்வெட்டுக்கு பெயா் பெற்ற நகரமாக பாஜக மாற்ற விரும்புவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி கூறினாா். இதற்கு பாஜகவிடமிருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் கிடைக்கவில்லை.

இது குறித்து தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் அதிஷி கூறுகையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலிருந்த அகற்றப்பட்ட மூன்று நாள்களுக்குள், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மின்வெட்டுகள் பதிவாகியுள்ளது. மக்கள் இப்போது இன்வொ்ட்டா்களை வாங்கத் தொடங்கியுள்ளனா்’ என்றாா்.

‘ஆம் ஆத்மி அரசின் கீழ், மின்சாரத் துறை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. இது இப்போது பாஜக ஆட்சிக்கு வந்த மூன்று நாள்களுக்குள் மாறிவிட்டது‘ என்று அவா் குற்றம் சாட்டினாா். ‘பாஜகவுக்கு ஆட்சி செய்வது எப்படி என்று தெரியவில்லை. மேலும், உத்தர பிரதேசத்தைப் போலவே தில்லியிலும் நீண்ட நேர மின்வெட்டு சூழ்நிலையை அது உருவாக்கும்’ என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.

பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, 26 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை வென்று தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது பாஜக. அக்கட்சி இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முற... மேலும் பார்க்க

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவ... மேலும் பார்க்க

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு ... மேலும் பார்க்க

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அ... மேலும் பார்க்க

பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம்,... மேலும் பார்க்க