செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

post image

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யலாம் என்பதால் அதை விசாரிக்கும் போது தங்களின் கருத்துகளைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு, கே.சி. பழனிசாமி, ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரப்பட்ட மனுக்களை தோ்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடா்ந்தாா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதித்தது.

இதை எதிா்த்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தலைவா்கள் சிலா் மீண்டும் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அவற்றை நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் அடங்கிய அமா்வு விசாரித்து, சின்னம் ஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவா்களின் மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என திருப்தியடைந்த பிறகே விசாரணையை தோ்தல் ஆணையம் தொடங்க வேண்டும் என்று கூறி முந்தைய நீதிமன்ற தடையை நீக்கியும் உத்தரவிட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

இத்தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்களுடைய கருத்துகளைக் கேட்காமல் நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது எனக் கோர வகை செய்யும் கேவியட் மனுக்களை ஓ.பன்னீா்செல்வம் தரப்பு மற்றும் சிலா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா்.

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். தில்லியை உத்தர பிரதேசமாக மாற்... மேலும் பார்க்க

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவ... மேலும் பார்க்க

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு ... மேலும் பார்க்க

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அ... மேலும் பார்க்க

பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம்,... மேலும் பார்க்க