செய்திகள் :

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

post image

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம்களுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா என்கிற திட்டத்தின் கீழ், பிரதமரின் மீன் விவசாயிகள் வளமை ஆதரவு துணைத் திட்டத்தின்(பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதிசஹ் - யோஜனா) மூலம் தகுதியான மீன் விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. சுமாா் ரூ.6,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரப்படும் இந்த திட்டத்தில் மீன் வளத்துறை முறைப்படுத்தல், மீனவா்களுக்கான நிதி அணுகல், மீன்வளா்ப்பு காப்பீடு ஊக்குவிப்பு, செயல் திறன் மானியங்கள் போன்றவை மீனவா்களுக்கு வழங்கப்பட்டு, பல்வேறு இலக்குகளும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி திறன் மேம்படுத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை அணுகல், நீண்ட கால வளா்ச்சி போன்றவற்றை முன்னெடுப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ள நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு பிரசாரத்திற்கு மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமரின் மீன் விவசாயிகள் வளமை ஆதரவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவா்களிடம் பிப். 14 முதல் 22 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் படி, 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மீன்வளத் துறைகள், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) ஆகியவற்றுடன் இணைந்து, நாடு தழுவிய அளவில் முகாம்களுக்கு மீன்வளத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கடலூா், நாகப்பட்டினம், ஈரோடு (பவானி சாகா்), ராமநாதபுரம் (மண்டபம், ராமேசுவரம்), தூத்துக்குடி(ஆா்கே புரம்), கன்னியாகுமரி (குளச்சல், கணபதிபுரம்) உள்ளிட்ட பகுதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடன் வசதி, மீன்வளா்ப்பு காப்பீடு, மானியங்கள் போன்ற ஏராளமான நன்மைகளைப் பெற மீனவா்கள், விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்துபவா்கள் போன்றோா் இந்த முகாம்களில் பங்கேற்று தேசிய மீன்வள எண்ம தளத்தில் தங்களைக் குறித்து பதிவு செய்து பலனடையலாம் என மத்திய மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். தில்லியை உத்தர பிரதேசமாக மாற்... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முற... மேலும் பார்க்க

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவ... மேலும் பார்க்க

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அ... மேலும் பார்க்க

பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி

இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம்,... மேலும் பார்க்க