செய்திகள் :

தில்லி விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்: 2 பெண்கள் கைது!

post image

தில்லி விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் ரூ.25.91 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த பிரேசிலைச் சேர்ந்த பெண்கள் இருவர் 1.72 கி கொகைன் கடத்தியதற்காகத் தனித்தனியே கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தில்லி விமான நிலைய சுங்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில், "இந்திரா காந்தி சர்வதேச விமான சுங்க அதிகாரிகள் இன்று இரண்டு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி 1.72 கிலோ கோகைன் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.

இரண்டு வழக்குகளிலும் பிரேசிலைச் சேர்ந்த பெண்கள் போதைப்பொருளைக் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!

கடந்த ஜனவரி 26 அன்று, சாவோ பாலோவிலிருந்து பாரிஸுக்கும், பின்னர் பாரிஸிலிருந்து தில்லிக்கும் பயணம் செய்த பிரேசிலைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் இந்திரா காந்தி விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய ஆய்வில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 959 கிராம் கோகைன் அடங்கிய ரூ.14.39 கோடி மதிப்புள்ள 93 காப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டன.

அன்று கைது செய்யப்பட்ட பெண்ணைப் போன்று அதே பயண வழியில் பிப்ரவரி 7 அன்று இந்தியா வந்த பிரேசிலைச் சேர்ந்த பெண்ணிடமும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

அவரது உடலை பரிசோதித்ததில், 768 கிராம் கோகைன் அடங்கிய 79 காப்ஸ்யூல்களை அதிகாரிகள் மீட்டனர். கைப்பற்றப்பட்ட கோகைனின் சந்தை மதிப்பு ரூ.11.52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது” என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொகைன் கடத்திய பெண்கள் இருவரும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காயம்!

கோழிக்கோடு : கேரளத்தில் கோயில் திருவிழாவில் யானைகள் மதம் பிடித்து ஓடியதில் 3 பேர் பலியாகினர். கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி அருகேயுள்ள குருவங்காடு மணக்குளங்கரை பகவதி கோயிலில் வியாழக்கிழமை(பிப். 13) ... மேலும் பார்க்க

தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு! -மத்திய அரசு தகவல்

தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று(பிப். 13) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவி தலாய் லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக... மேலும் பார்க்க

உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து விவகாரம்: யூடியூபருக்கு காவல் துறை சம்மன்!

உடலுறவு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய யூடியூபர் சமய் ரெய்னா காவல் துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படுள்ளது. என்ன நடந்தது? அண்மையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்று... மேலும் பார்க்க

மாநிலங்களவை மார்ச் 10 வரை ஒத்திவைப்பு!

புது தில்லி : மாநிலங்களவை கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, மக்களவை இன்று(பிப். 13) கூடியதும் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்..!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்த அறிவிப்பாணையை இன்று(பிப். 13) மாலை வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க