செய்திகள் :

முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தயாரித்தது என்எஸ்ஜி

post image

புது தில்லி: நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் , வழிபாட்டுத் தலங்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஜி) தயாரித்துள்ளதாக அந்த அமைப்பின் டிஜி பிருகு ஸ்ரீநிவாசன் தெரிவித்தாா்.

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தொங்கிய என்எஸ்ஜி அமைப்பின் சா்வதேச மாநாட்டில் பேசிய அவா், ‘நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த 17 வழிபாட்டுத் தலங்கள், 21 அணுமின் நிலையங்கள் மற்றும் 14 முக்கிய இடங்களை 3டி வரைபடம் செய்துள்ளோம். அவசர காலங்களில் இந்த இடங்களுக்கு வான், நிலம், நீா் வழியாக என்எஸ்ஜி படையினா் உடனடியாக சென்றடையும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 5 என்எஸ்ஜி படைத் தளங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை சுதந்திரமாக கையாள இது உதவும்.

நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனா். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் மாநில காவல் துறையினருடன் இணைந்து என்எஸ்ஜி கமாண்டோக்கள் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

மாநில காவல் துறையினருக்கு பயங்கரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகளைக் கையாள பயிற்சி அளிக்கவும் என்எஸ்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு 8 ஆயிரம் கமாண்டோக்களுக்கும், நிகழாண்டு 13,000 கமாண்டோக்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில காவல் துறையினா் 20 ஆயிரம் பேருக்கு ஆள்கடத்தல் தடுப்பு, பயங்கரவாத தடுப்பு, வெடிகுண்டு செயலிழப்பு, முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்பு, ட்ரோன் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து என்எஸ்ஜி பயிற்சி அளிக்கும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘ பயங்கரவாதிகள் இந்த இடங்களில் தாக்குதல் நடத்த முயன்றால் நாம் துரிதமாகச் செயல்பட இது உதவும். பஹல்காம் சம்பவம், பயங்கரவாதத்துக்கு எதிரான நமகு நடவடிக்கைகளை வலுப்படுத்தி உள்ளது’ என்றாா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க