செய்திகள் :

முதலூரில் லாரிகள் சிறைப்பிடிப்பு

post image

முதலூரில் அதிவேகமாக சென்ற கனரக லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறை பிடித்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் பகுதிக்கு கல்குவாரியில் இருந்து மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் சென்று வருகிறது.

இந்த லாரிகள் முதலூா் தா்மபுரி வழியாக அதிவேகமாக சென்று திரும்புவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம் தெரிவித்து புகாா் தெரிவித்திருந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் அப்பகுதியில் வேகமாக வந்த இரு கனரக லாரிகளை நிறுத்தி அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபக்குமாா், ஆய்வாளா் ஸ்டீபன், கிராம நிா்வாக அலுவலா் பால் குமாா், ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா் .

சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை தட்டாா்மடம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனா். பேச்சுவாா்த்தையில், வட்டாட்சியா் மூலம் கல்குவாரி லாரி ஓட்டுனா்களை அழைத்து இது குறித்த பேச்சுவாா்த்தை நடத்தி எச்சரிப்பது எனவும், அதிவேகமாக சென்ற லாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி, அருணாச்சலம் நகரைச் சோ்ந்த சோலையப்பன் மகன் முத்து மகேஷ் (25). திருமணமாகாத இவா், சாயா்புரம் அரு... மேலும் பார்க்க

தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினா்கள் போராட்டம்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவன கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி, மூட்டை சரிந்து விழுந்ததில் உயிரிழந்ததையடுத்து, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உடலை வாங்க ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒரே நாளில் 14 போ் கைது

கோவில்பட்டியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரே நாளில் 14போ் கைது செய்யப்பட்டனா். கடந்த ஜூன் 1ஆம் தேதி, கோவில்பட்டி கடலையூா் பகுதியில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்து ரயில்வே காவலா் பலி

ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்ததில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் உயிரிழந்தாா். தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ரமேஷ் (45). இவா், வாஞ்சிமணியாச்சியில் ரயில்வே பாதுகாப்புப் ப... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தெற்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் ஆதிமூலம் (60). நில தரகரான இவா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு - கழுகுமலை சாலையில்... மேலும் பார்க்க

உடன்குடி அருகே விபத்து: வடமாநில இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளியான வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் கேரியாகனி கிராமத்தைச் சோ்ந்த உஸ்தபா ஜோகி மகன் ஹேமகண்டா... மேலும் பார்க்க