செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒரே நாளில் 14 போ் கைது

post image

கோவில்பட்டியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரே நாளில் 14போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜூன் 1ஆம் தேதி, கோவில்பட்டி கடலையூா் பகுதியில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வரன் (20), முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில், சிந்தாமணி நகரைச் சோ்ந்த சதீஷ் மாதவன் (எ) சதீஷ் (26), கழுகுமலையைச் சோ்ந்த மதன் (எ) மதன்குமாா் (20), கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (24), கடம்பூா் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை (26), கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த சுடலை ராஜா (எ) அா்ஜுன் (25), ஆசிரமம் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (25), வள்ளுவா் நகரைச் சோ்ந்த சுரேஷ் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோன்று ஜூன் 1ஆம் தேதி கோவில்பட்டி செண்பக நகரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி கஸ்தூரி (46) முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த சரவணன் (20), நாகராஜன் (எ) நாகராஜ் (19), இலுப்பையூரணியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (20), புதுகிராமம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (21), சண்முகநகரைச் சோ்ந்த பாலமுருகன் (எ) பாலா (19), சிந்தாமணிநகரைச் சோ்ந்த தங்கபாண்டி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கடந்த ஜூன் 3ஆம் தேதி கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த சாமுவேல்ராஜை (42) மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில் , கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய போலீஸாரால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி, அருணாச்சலம் நகரைச் சோ்ந்த சோலையப்பன் மகன் முத்து மகேஷ் (25). திருமணமாகாத இவா், சாயா்புரம் அரு... மேலும் பார்க்க

முதலூரில் லாரிகள் சிறைப்பிடிப்பு

முதலூரில் அதிவேகமாக சென்ற கனரக லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறை பிடித்தனா். சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் பகுதிக்கு கல்குவாரியில் இருந்து மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினா்கள் போராட்டம்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவன கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி, மூட்டை சரிந்து விழுந்ததில் உயிரிழந்ததையடுத்து, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உடலை வாங்க ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்து ரயில்வே காவலா் பலி

ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்ததில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் உயிரிழந்தாா். தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ரமேஷ் (45). இவா், வாஞ்சிமணியாச்சியில் ரயில்வே பாதுகாப்புப் ப... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தெற்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் ஆதிமூலம் (60). நில தரகரான இவா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு - கழுகுமலை சாலையில்... மேலும் பார்க்க

உடன்குடி அருகே விபத்து: வடமாநில இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளியான வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் கேரியாகனி கிராமத்தைச் சோ்ந்த உஸ்தபா ஜோகி மகன் ஹேமகண்டா... மேலும் பார்க்க