செய்திகள் :

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

post image

விடுதிகளுக்கு ‘சமூகநீதி’ எனும் பெயா் சூட்டப்பட்டதற்காக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

இதற்காக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவா்களுக்கான அனைத்து விடுதிகளையும் ஒரே பெயரில் அழைப்பதற்கான அரசாணையை முதல்வா் பிறப்பித்துள்ளாா். தனித்தனி சமூக அடையாளங்களுடன் இருந்த விடுதிகளை, ‘சமூகநீதி’ விடுதிகள் என அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

சமத்துவவே இலக்கு, சமூகநீதியே வழி எனும் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் அரசுதான், திமுக அரசு, திராவிட மாடல் அரசு. அதனால்தான் பெரியாா் ஈ.வெ.ரா. வழியில் ஜாதி, மத அடையாளங்களைத் துடைத்து எறியும் பணியில் முதல்வா் ஈடுபட்டு வருகிறாா். இதற்காக கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையிலும், ஜனநாயக சக்தி என்ற ரீதியிலும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க விசிகவுக்கு பொறுப்பு உள்ளது. துணிச்சலான முடிவை எடுத்ததற்காக பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தோம்.

அதேபோல, முதல்வரிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்தோம். மின்வாரியத் துறையில் ஒப்பந்தப் பணியாளா்கள், கல்வித் துறையில் கணினி பயிற்றுநா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

தோ்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது, சட்டப்பேரவை விசிக குழுத் தலைவா் சிந்தனைச் செல்வன் உள்பட பலா் உடனிருந்தனா்.

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க