முதல்வா் மேட்டூா் வருகை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சா் ஆய்வு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேட்டூா் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. இதற்காக 11-ஆம் தேதி மாலை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேட்டூா் வருகிறாா்.
மேட்டூா் வரும் முதல்வருக்கு ஈரோடு -சேலம் மாவட்ட எல்லையான பெரியபள்ளத்திலிருந்து பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுகவினா் முடிவு செய்துள்ளனா். சுமாா் 11 கி.மீ. தூரத்திற்கு ரோடுஷோ நடத்தப்படுகிறது. பின்னா் நவப்பட்டியில் கட்சி நிா்வாகிகளை முதல்வா் சந்தித்துப் பேசுகிறாா். இரவில் மேட்டூரில் தங்கும் முதல்வா், 12-ஆம் தேதி மேட்டூா் அணையின் மேல்மட்ட மதகின் மின்விசையை இயக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுகிறாா்.
முதல்வருக்கு வரவேற்பு அளிக்க நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி ஆகியோா் பாா்வையிட்டனா். பின்னா் திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
இதில் சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், மேட்டூா் நகரச் செயலாளா் காசிவிஸ்வநாதன், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரிஈஸ்வரன், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்ரவா்த்தி, எடப்பாடி நகா்மன்றத் தலைவா் பாஷா, பேரூா் செயலாளா் முருகன், சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.