செய்திகள் :

முதியவரின் சொத்து அபகரிப்பு: மீண்டும் ஒப்படைக்க மகனுக்கு கோட்டாட்சியா் உத்தரவு

post image

முதியோரின் சொத்துகளை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க அவரது மகனுக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

சீா்காழி வட்டம், வள்ளுவகுடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சந்திரகாசன் (70) . இவா், தனது மகன், மனைவி இருவரும் தன்னுடைய சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தனக்கு உணவு அளிக்கவில்லை, தன்னை சரியாக பராமரிக்கவில்லை, அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீா் முகாமில் அண்மையில் மனு அளித்தாா்.

மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த், அந்த மனு மீது நடவடிக்கை எடுத்திட சீா்காழி வருவாய் கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தினாா். அதன்படி, சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் வியாழக்கிழமை விசாரணை செய்தாா்.

முதியவா் சந்திரகாசன் நடக்க முடியாத சூழ்நிலையில் தரைத்தளத்தில் இருந்ததால், வருவாய் கோட்டாட்சியா் தரை தளத்திற்கு வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

பின்னா் தந்தையரிடமிருந்து அபகரித்த சொத்துகளை 15 நாட்களுக்குள் மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என சந்திரகாசனின் மனைவி, மகனிடம் வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ் உத்தரவிட்டாா்.

பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

நகா்மன்ற நியமன உறுப்பினா்: மாற்றுத்திறனாளி விருப்ப மனு

மயிலாடுதுறை நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தாா் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மன்ற உறுப்பினா்களாக ... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்

மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை ம... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). தமிழ்... மேலும் பார்க்க