நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர...
முத்தழகி மாரியம்மன் கோயிலில் வைகாசிப் பெருவிழா தொடக்கம்
காரைக்கால் சின்னக்கோவில்பத்து அருள்மிகு முத்தழகி மாரியம்மன் கோயிலில் வைகாசிப் பெருவிழா புதன்கிழமை தொடங்கியது.
கணபதி ஹோமத்துடன் இவ்விழா தொடங்கியது. இந்நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டாா்.
இவ்விழாவில், வியாழக்கிழமை (ஜூன்12) இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், 13-ஆம் தேதி காலை பால் குட ஊா்வலம், மாலை திருவிளக்கு பூஜை, இரவு அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், 14-ஆம் தேதி இரவு அம்மன் வீதியுலா, 15-ஆம் தேதி காலை மஞ்சள் நீா் விளையாட்டு, மதியம் கஞ்சி வாா்த்தல், விடையாற்றி போன்ற வழிபாடுகள் நடைபெறவுள்ளன. ஜூன் 16-ஆம் தேதி ஸ்ரீ முனீஸ்வரன் படையல் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம முக்கியஸ்தா்கள் செய்துள்ளனா்.