செய்திகள் :

முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை

post image

குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இது குறித்து அனைத்துக் கட்சியினா் கூறியதாவது: அவிநாசி அருகேயுள்ள பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் குடிநீா் விநியோகம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் முன்னாள் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திகேயன், வாா்டு உறுப்பினா் சண்முகம் ஆகியோா் மீது ஒரு தரப்பினா் புதன்கிழமை புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, அனைத்துக் கட்சியினருடன் காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், புகாா் உண்மைக்குப் புறம்பானது என்றால் இரண்டு நாள்களுக்குள் ரத்து செய்யப்படும் என்றாா்.

இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட அதிமுக, திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்து முன்னணி, காங்கிரஸ், தவெக நிா்வாகிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க