செய்திகள் :

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

post image

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வானிலை மையத்தின் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மும்பையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்தநிலையில், வாரத்தின் முதல் வேலை நாளான இன்று(ஆக. 18) மும்பையிலுள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டன. மும்பையின் ஒரு தனியார் பள்ளியிலிருந்து குழந்தைகள் சிலரை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் சியோன் பகுதியிலுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் இடுப்பளவு உயரத்துக்கு தேங்கி நின்ற மழைநீரில் தத்தளித்து நின்றது.

இதனால் வேனில் இருந்த குழந்தைகள் 6 பேரும், இரு பெண் பணியாளர்களும் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்தத் தகவல் அருகாமையில் இருந்த மதுங்கா காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரிய வரவே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக அந்த வேன் அருகே சென்று குழந்தைகளை வெள்ளத்துக்கு நடுவே பத்திரமாக சுமந்து சென்று காவல் நிலையத்தில் தங்க வைத்தனர்.

இதனால் வேனில் இருந்த குழந்தைகள் 6 பேரும், இரு பெண் பணியாளர்களும் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்தத் தகவல் அருகாமையில் இருந்த மதுங்கா காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரிய வரவே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக அந்த வேன் அருகே சென்று குழந்தைகளை வெள்ளத்துக்கு நடுவே பத்திரமாக சுமந்து சென்று காவல் நிலையத்தில் தங்க வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸாரின் செயலுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

Mumbai Rains: A school bus was stuck in severe waterlogging near Gandhi Market in Sion on Monday morning. Police successfully rescued everyone and brought them safely to the Matunga Police Station.

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலை... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று (ஆக. 18) பேசினார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித... மேலும் பார்க்க

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை விமர்சித... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் ச... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க

அசாமில் ஒரே மாதத்தில் 7-வது முறையாக நில அதிர்வு!

அசாம் மாநிலத்தில் இன்று(ஆக. 18) பிற்பகல் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது. நாகோன் மாவட்டத்தில் இன்று உணரப்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ப... மேலும் பார்க்க