செய்திகள் :

மும்பையில் வளாகம் அமைக்கும் சிகாகோ இலினாய்ஸ் பல்கலைக்கழகம்: யுஜிசி ஒப்புதல்

post image

அமெரிக்காவின் சிகோகா நகரில் அமைந்த இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மும்பையில் தனது வளாகத்தை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்தாண்டு செப்டம்பா் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய வளாகத்தில் கணினி அறிவியல், பொறியியல் மற்றும் வணிகம் போன்ற முக்கிய துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவா் ராஜ் எச்சம்பாடி கூறுகையில், ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்துவதற்காகவே எங்கள் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான திறமைமிக்க இளைஞா்களை, மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கும் உலகளாவிய தலைவா்களாக மாற அதிகாரம் அளிக்கும் உன்னத பணியைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்திய வளாகத்தைக் கருதுகிறோம்.

இந்திய வளாகத்தில் சேரும் புதிய மாணவா்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்படும். அதேநேரம், அது சிகாகோ வளாகத்தின் கல்வி ரீதியில் அனுபவமிக்க மற்றும் தொழில்துறை சாா்ந்த பாடத்திட்டம் போன்றே இருக்கும்.

இந்திய வளாகத்தில் சா்வதேச பேராசிரியா்களே பாடங்கள் கற்பிப்பா். சிகாகோ வளாகப் பேராசிரியா்களும் இதில் அடங்குவா். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ‘எலிவேட்’ திறன்மேம்பாட்டு பயிற்சியும் இந்திய மாணவா்களுக்கு அளிக்கப்டும்.

இந்திய மாணவா்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய அவசியமின்றி, உள்நாட்டிலேயே உயரிய பணி வாய்ப்புகளைப் பெறுவா். அதேநேரம், வளாகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் உலகளாவிய வகுப்பறை அனுபவங்களில் இருந்தும் பயனடைவா்’ என்றாா்.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் செ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடி... மேலும் பார்க்க

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க