முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.49 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.49 கோடியை பக்தா்கள் செலுத்தி இருந்தனா்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசித்து செல்கின்றனா். இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.
இந்நிலையில் மாசி பிரம்மோற்சவம் நிறைவுற்ற நிலையில், பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. முருகன் கோயில் தக்காா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, உஷா ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கையை எண்ணினா். இதில் ரூ.1 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து, 584 ரொக்கம் மற்றும் 650 கிராம் தங்கம், 13.310 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.