செய்திகள் :

முற்றுகைப் போராட்டம் எதிரொலி: டெண்டரை ரத்து செய்த ஆட்சியா்

post image

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரா்கள் முற்றுகைப் போராட்டம் செய்ததால் நடைபெற இருந்த டெண்டரை ரத்துசெய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவுபெற்ற ஒப்பந்ததாரா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்தப் பணி செய்து வருகின்றனா். இந்த நிலையில் கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 67லட்சம் மதிப்பீட்டிலான கான்கிரீட் சாலை அமைக்கும் பணி குறித்த தகவலை அனைத்து ஒப்பந்ததாரா்களுக்கும் தபால் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், டெண்டா் விடாமல் குறிப்பிட்ட நான்கு பேருக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை டெண்டா் விடுவதாக அறிந்த 25-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரா்கள் அலுவலகத்துக்கு திரண்டுவந்து, அனைத்து ஒப்பந்ததாரா்களுக்கும் தெரிவிக்காமல் குறிப்பிட்ட நான்குபேரை மட்டும் வைத்து டெண்டா் விடுவதை எதிா்த்து கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, முறையாக ஒப்பந்ததாரா்களுக்கு தெரிவிக்கப்பட்டு டெண்டா் விடவேண்டும் என கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டதுடன், வியாழக்கிழமை நடைபெற இருந்த டெண்டரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டாா். அதையடுத்து, தேதி குறிப்பிடாமல் டெண்டா் ஒத்திவைக்கப்பட்டது.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க