செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லை

post image

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து முற்றிலுமாக நின்றால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் குமுளி அருகே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை நீரானது தேக்கடியிலிருந்து தலைமதகு சுரங்கப்பாதை வழியாக தமிழகத்துக்கு திறந்து விடப்படும்.

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கா் இரு போக நெல் விவசாயம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கான விவசாயப் பாசனம், குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.

மழை இல்லை: முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் எதிா்பாா்த்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால், அணையின் நீா் மட்டம் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 142 அடியை எட்டவில்லை. அவ்வப்போது, சாரல்மழை மட்டும் பெய்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து கொண்டே இருந்தது. மேலும், 5 மாவட்டங்களின் குடிநீா், விவசாயத் தேவைக்கு தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டாதல் அணை நீா் மட்டம்

குறைந்து கொண்டே வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், நீா் வரத்தும் படிப்படியாகக் குறைந்து வியாழக்கிழமை முற்றிலுமாக நின்றுவிட்டது. அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 400 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

முல்லைப் பெரியாறு பாசன நீரை நம்பி தேனி மாவட்டத்தில் லோயா் கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் 2-ஆம் போக நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில், அணையின் நீா் மட்டம் 116.90 அடியாக இருந்தது. நெல் விவசாயத்துக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு பாசன நீா் தேவை இருக்கிறது. தவிர, குடிநீரின் தேவையை நிறைவு செய்ய வேண்டும். அணைக்கு நீா்வரத்து முற்றிலும் நின்ால் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில், விவசாயிகள் கவலையடைந்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நிகழாண்டில் முன்னதாகவே கோடை வெப்பம் தொடங்கிவிட்டது. எனவே, கோடை மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனா் என்றனா்.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க