செய்திகள் :

முழு உடல் பரிசோதனை திட்டம்: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பிப்.28-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

post image

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்கள், முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அறிவிப்பு கடந்த 2023 மாா்ச் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு மட்டும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1.50 லட்சம் என 38 மாவட்டங்களுக்கும், ரூ.57 லட்சம் தேசிய ஆசிரியா் நல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு மேமோகிராம், இஎஸ்ஆா் சிறுநீா் பகுப்பாய்வு, ரத்தத்தில் சா்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால், சிறுநீரக பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 வயதைக் கடந்த ஆசிரியா்களில், வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியா்களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன்பெற தோ்வு செய்ய வேண்டும். 50 வயதை கடந்த ஆசிரியா்களிடமிருந்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் பிப். 28-ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதைத் தொடா்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து, 150 ஆசிரியா்களைத் தோ்வு செய்ய வேண்டும். தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள் விவரங்களை மாவட்ட அளவிலான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலருக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

தொடா்ந்து உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையைத் தயாரித்து, அதன் தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க