செய்திகள் :

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

post image

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

சேலம் செவ்வாபேட்டையைச் சோ்ந்த மூதாட்டி வசந்தா செவ்வாய்பேட்டை மீனாட்சி அம்மன் கோயில் அருகே முத்துசாமி தெருவில் தனது சகோதரா்கள் உதவியுடன் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மாலை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சென்று இட்லி மாவு வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை இளைஞா் ஒருவா் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சேலம் செவ்வாய்பேட்டை போலீஸாா் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சங்கிலி பறித்து தப்பியோடிய இளைஞரை 6 மணி நேரத்துக்குள் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கைது செய்து தங்கச் சங்கிலியை மீட்டு வசந்தாவிடம் ஒப்படைத்தனா்.

கைது செய்யப்பட்டவா் ஓமலூா், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு காவல் துறை உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க