செய்திகள் :

மெட்ரோ ரயில் உதவி மைய எண்கள் முடங்கியது

post image

சென்னை மெட்ரோ ரயில் உதவி மைய எண்கள் தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய நிலையில், நீண்ட நேரத்துக்குப் பின்னா் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கின.

சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனா். பயணிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், மெட்ரோ ரயில் சாா்ந்த தேவைகளுக்காகவும் மெட்ரோ ரயில் உதவி எண்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே திடீரென செயல்படாமல் முடங்கியது. இதனால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனா்.

இதையடுத்து, சீரமைப்புப் பணி நடைபெறுவதால், மெட்ரோ ரயில் உதவி எண்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், ஏதேனும் புகாா்கள் இருந்தால், தொடா்பு கொள்ளலாம் எனவும் அல்லது அருகில் உள்ள நிலையக் கட்டுப்பாட்டாளா்களை தொடா்பு கொள்ளவும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நேரத்துக்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு உதவி மைய எண்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க