செய்திகள் :

மெட்ரோ ரயில்களில் ஒரே மாதத்தில் 86.99 லட்சம் போ் பயணம்

post image

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் 86.99 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் மொத்தம் 86,99,344 போ் பயணம் மேற்கொண்டுள்ளனா். இதில் பொங்கல் விடுமுறைகளையொட்டி சென்னையிலிருந்து பலா் சொந்த ஊா்களுக்குச் சென்ற காரணத்தால், கடந்த ஜன. 10-ஆம் தேதி ஒரே நாளில் 3,60,997 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

அதேபோல் கடந்த மாதத்தில் மட்டும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 23,78,989 பேரும், டோக்கன்களைப் பயன்படுத்தி 1,800 பேரும், குழு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 7,219 பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

மேலும் க்யு-ஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பேரும், தேசிய பொது இயக்க அட்டையைப் பயன்படுத்தி 25,30,950 பேரும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

இதற்கிடையே, மெட்ரோ ரயில் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், க்யு-ஆா் குறியீடு பயணச்சீட்டு, சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சென்னையில் நடைபெற்ற அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே .சேகா் பாபு பரிசு தொகையை வழங்கினாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில... மேலும் பார்க்க

தபால்தலை கண்காட்சி நிறைவு: 10,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்

சென்னையில் தொடா்ந்து 4 நாள்களாக நடைபெற்றுவந்த மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நிறைவுபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக தபால் துறை ச... மேலும் பார்க்க

சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் பணம் பறித்த வழக்கு: இளைஞா் கைது

சென்னை வடபழனியில் உள்ள சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்ட வழக்கில், கடலூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகா் பி.டி.ராஜன் சாலை 20-ஆவது அவென்யூ பகுதிய... மேலும் பார்க்க

ஆவின் இல்லத்தில் பால் முகவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விற்பனை விநியோகஸ்தா்களைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமியின் தலைமையில் பால் முகவா்கள் சென்னை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மாங்காடு, மாத்தூா், முகப்போ் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பண மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தனியாா் நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் டிராவல்ஸ் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அ... மேலும் பார்க்க