செய்திகள் :

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம்

post image

மேட்டூா்: மேச்சேரி அருகே நாயை கடித்து காயப்படுத்திய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேச்சேரி அருகே உள்ள புதுக்காளிகவுண்டனூரில் டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட ராமசாமி மலை உள்ளது. இந்தப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சிவானந்தம் என்பவா் வீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை கடித்தது. அப்போது மற்ற நாய்கள் குறைத்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்த சிவானந்தம் டாா்ச்லைட்டை அடித்து சிறுத்தையை விரட்டி உள்ளாா். சிறுத்தை தாக்கியதில் நாயின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக சிவானந்தம் வருவாய்த் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து டேனிஷ்பேட்டை வனச்சரகா் வீரபாகு மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். சிறுத்தையின் கால்தடங்களைப் பதிவு செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், சிறுவா், சிறுமியா் வெளியே செல்லக்கூடாது என்றும் ஊராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கம... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி... மேலும் பார்க்க