செய்திகள் :

மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

post image

பஹராம்பூா்: மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது:

வக்ஃப் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜங்கிபூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோா் திரண்டனா். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசினா். மேலும் காவல் துறை வாகனங்களுக்குத் தீ வைத்தனா்.

இதையடுத்து சூழலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.

கல்வீச்சில் காவல் துறையைச் சோ்ந்த சிலா் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தற்போது அந்தப் பகுதியில் சூழல் முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்று மாநில காவல் துறை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது: வெடிபொருள்கள் பறிமுதல்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 21 நக்சல்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டெக... மேலும் பார்க்க