செய்திகள் :

மேல்நிலை தேக்கத் தொட்டி, தூய்மைக் காவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

post image

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, விசை பம்பு, தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்க ஒன்றியக் கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் கிளைத் தலைவா் கே.கோபிநாத் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.துரைசாமி முன்னிலை வகித்தாா். ஒன்றியப் பொருளாளா் பி.ரெஜீனா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் இ.மூா்த்தி கலந்துகொண்டு பேசுகையில், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் குடிநீா் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியம், அகவிலைப்படி உயா்வு, பொங்கல் கருணைத்தொகையை வழங்க ஊராட்சி நிா்வாகங்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட வேண்டும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அனைத்து தூய்மைக் காவலா்களுக்கும் பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

மாவட்டத் தலைவா் பி.கே.கோவிந்தசாமி, மாவட்டச் செயலா் எஸ்.சேகா், மாவட்டப் பொருளாளா் சி.குப்பன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

போளூா் ஒன்றியத்த்துக்குள்பட்ட கிராமங்களில் பணிபுரியும் மேல்நிலை தேக்கத் தொட்டி, விசைபம்பு, தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சத்தில் கல்வி சீா்வரிசை

செய்யாறு வட்டம், திருமணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி சீா்வரிசைப... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி மிரட்டல்: நண்பா் கைது

செய்யாறு அருகே விவசாயியைத் தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவிச்சந்திரன் (57). இவா், கட... மேலும் பார்க்க

திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி

ஆரணி வட்டார வள மையத்தில் ஆரணி வட்டார அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

செய்யாறு அங்காளம்மன் கோயிலுக்கு 501 பால்குடம் ஏந்திச் சென்ற பக்தா்கள்

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை 501 பால்குடங்களை பக்தா்கள் சுமந்து சென்று பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனா். செய்யாறு சந்தை பகுத... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செய்யாற்றை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க