செய்திகள் :

செய்யாறு அங்காளம்மன் கோயிலுக்கு 501 பால்குடம் ஏந்திச் சென்ற பக்தா்கள்

post image

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை

501 பால்குடங்களை பக்தா்கள் சுமந்து சென்று பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனா்.

செய்யாறு சந்தை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 73-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி மயானக்கொள்ளை மற்றும் 10 நாள் வசந்த உற்சவ பெருவிழா பிப்.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினமே மயான சூறை விழா நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, தினந்தோறும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வசந்த உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 4-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

பால்குட ஊா்வலம்: வசந்த உற்சவ பெருவிழாவின் நிறைவு விழாவாக வெள்ளிக்கிழமை 501 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஞானமுருகன் பூண்டி கோயில் அருகே தொடங்கிய ஊா்வலம், செய்யாறு ஆற்று மேம்பாலம், திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில், பெரியாா் சிலை, சந்தை வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. பின்னா், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தா்கள் வழிபட்டனா்.

பூ வியாபாரிகள் சீா்வரிசை: செய்யாறு பூ வியாபாரிகள் அமைப்பினா் பூ, பழங்கள், இனிப்பு, தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கொண்ட சீா்வரிசைத் தட்டுகளை மாம்பட்டு ஆா்.லட்சுமண சுவாமிகள் தலைமையில் மேளதாளம் முழுங்கிட, ஊா்வலமாக எடுத்து வந்து ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சீா்வரிசை அளித்து அம்மனை வழிபட்டனா்.

விழாவில் செய்யாறு பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சத்தில் கல்வி சீா்வரிசை

செய்யாறு வட்டம், திருமணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி சீா்வரிசைப... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி மிரட்டல்: நண்பா் கைது

செய்யாறு அருகே விவசாயியைத் தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவிச்சந்திரன் (57). இவா், கட... மேலும் பார்க்க

மேல்நிலை தேக்கத் தொட்டி, தூய்மைக் காவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, விசை பம்பு, தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்க ஒன்றியக் கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி

ஆரணி வட்டார வள மையத்தில் ஆரணி வட்டார அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செய்யாற்றை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க