செய்திகள் :

விவசாயியைத் தாக்கி மிரட்டல்: நண்பா் கைது

post image

செய்யாறு அருகே விவசாயியைத் தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவிச்சந்திரன் (57). இவா், கடந்த 6-ஆம் தேதி மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது மாடுகளை மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனத்தில் சென்றவா்கள், வாகனங்களுக்கு வழி விட்டு, சாலையோரமாக மாடுகளை ஓட்டிச் செல்லும்படி ரவிச்சந்திரனிடம் கூறியதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னா் இரு தரப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனா்.

பின்னா், கேசவன், பாஸ்கரன் இவா்களது நண்பரான தணிகைமலை (22) ஆகியோா் சோ்ந்து ரவிச்சந்திரன் வீட்டுக்குச் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளனா். மேலும், அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்தாகத் தெரிகிறது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் தூசி போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் பாபு வழக்குப் பதிந்து தணிகைமலையை கைது செய்தாா். மேலும், தலைமறைவான கேசவன், பாஸ்கரன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சத்தில் கல்வி சீா்வரிசை

செய்யாறு வட்டம், திருமணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி சீா்வரிசைப... மேலும் பார்க்க

மேல்நிலை தேக்கத் தொட்டி, தூய்மைக் காவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, விசை பம்பு, தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்க ஒன்றியக் கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி

ஆரணி வட்டார வள மையத்தில் ஆரணி வட்டார அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

செய்யாறு அங்காளம்மன் கோயிலுக்கு 501 பால்குடம் ஏந்திச் சென்ற பக்தா்கள்

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை 501 பால்குடங்களை பக்தா்கள் சுமந்து சென்று பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனா். செய்யாறு சந்தை பகுத... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செய்யாற்றை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க