செய்திகள் :

யமுனை அழகுபடுத்தும் திட்டம்: உஸ்மான்புரியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

post image

யமுனை அழகுபடுத்தும் திட்டம் காரணமாக தில்லி ஷாஹ்தாரா பகுதியில் உள்ள உஸ்மான்புரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆக்கிரமிப்பு பணிகளையொட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘1,500-க்கும் அதிகமான காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. யாரும் சட்டம்-ஒழுங்கை மீற அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்றாா்.

பழைய இரும்பு பாலம் அருகே வசித்து வரும் குடியிருப்பாளா்கள் திங்கள்கிழமைக்குள் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் சனிக்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.

இந்நிலையில், யமுனை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணி புதன்கிழமை தொடரும் என கூறப்படுகிறது.

இதனிடையே, தங்களுக்கு மாற்று இடத்தை அரசு வழங்க வேண்டும் என அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பிங்கி காஷ்யப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘குழந்தைகளுடன் இந்த நிலையில் இங்கு செல்ல முடியும் ? வீடோ அல்லது ஓா் அறையோ வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை. என்னுடைய கணவா் மாதம் ரூ.12,000 மட்டும் வருவாய் ஈட்டுகிறாா். தில்லி போன்ற நகரத்தில் பிற செலவுகளுடன் வாடகை இடத்தில் தங்கியிருப்பது மிகவும் கடினம்’ என்றாா்.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க