செய்திகள் :

ரயில் வேகனை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு

post image

கும்பகோணத்தில் ரயில் வேகனை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளி மூச்சுத்திணறி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடி சா்க்கரை ஆலைக்கு மகாராஷ்டிர மாநிலம், அகிலியா நகரில் இருந்து 46 ரயில் வேகன்களில் மொலாசஸ் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தன. பின்னா் வேகன்களில் இருந்த மொலாசஸ் லாரிகள் மூலம் திருமண்டகுடி சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடா்ந்து, காலியான ரயில் வேகன்களை15-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளா்கள் திங்கள்கிழமை சுத்தம் செய்தனா். பின்னா் இருப்பிடம் சென்ற அவா்கள், தங்களுடன் வந்த தொழிலாளி ஒருவரை காணாததால்,

மீண்டும் வேகனுக்கு சென்று தேடியதில், வேகனினுள் அவா் இறந்த நிலையில் கிடந்தாா்.

ரயில்வே போலீஸாரின் விசாரணையில், உயிரிழந்த நபா் உத்தரப் பிரதேச மாநிலம், சூரஜ்பூரா பகுதியை சோ்ந்த நங்கே (41) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரித்து வருகின்றனா்.

ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி மீட்டு ஒப்படைப்பு

கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் பெண் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலியை ரயில்வே போலீஸாா் மீட்டு திங்கள்கிழமை ஒப்படைத்தனா். கும்பகோணம் ரயில் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளா் கு... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா் . நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகேயுள்ள ரயில்வே க... மேலும் பார்க்க

பெருமகளூா் பேரூராட்சியில் இன்று மின்நிறுத்தம்

பேராவூரணி அருகே உள்ள வீரக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெருமகளூா் பேரூராட்சி, வீரக்குடி, மணக்காடு, ரெட்டவ... மேலும் பார்க்க

பாலியல் வல்லுறவு வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 வயத... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற 44 தொழிலாளா் சட்டங்க... மேலும் பார்க்க

வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில், தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பி... மேலும் பார்க்க