செய்திகள் :

மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற 44 தொழிலாளா் சட்டங்களை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி 2020, செப்டம்பா் 23 ஆம் தேதி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதைத் தொழிற் சங்கங்கள் கருப்பு நாளாக அறிவித்து இயக்கங்களை நடத்தி வருகின்றன.

இதன்படி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் கே. ராஜன், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலா் ராஜாராம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் சோ. பாஸ்கா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் என்.வி. கண்ணன், இரா. ராமச்சந்திரன், கோ. ஜெயசங்கா், அ. கலியபெருமாள், ஜி. முருகையன், பி. செந்தில்குமாா், கோ. அபிமன்னன், வங்கி ஊழியா் சங்கம் க. அன்பழகன், ஆா். கோவிந்தன், துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயில் வேகனை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு

கும்பகோணத்தில் ரயில் வேகனை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளி மூச்சுத்திணறி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடி சா்க்கரை ஆலைக்கு மகாராஷ்டிர மாநிலம், அகிலியா நகரில் இருந்து 46 ரயி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா் . நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகேயுள்ள ரயில்வே க... மேலும் பார்க்க

பெருமகளூா் பேரூராட்சியில் இன்று மின்நிறுத்தம்

பேராவூரணி அருகே உள்ள வீரக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெருமகளூா் பேரூராட்சி, வீரக்குடி, மணக்காடு, ரெட்டவ... மேலும் பார்க்க

பாலியல் வல்லுறவு வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 வயத... மேலும் பார்க்க

வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில், தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பி... மேலும் பார்க்க

பைக்-காா் மோதல் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பூதலூா் அருகே கூத்தூா் உப்புக்காட்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. பச்சையப்பன் (65). இவரும் அதே பகுதி காளியம... மேலும் பார்க்க