செய்திகள் :

பாலியல் வல்லுறவு வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை

post image

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அவரது தந்தை 2020 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு செய்தாா். இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையைக் கைது செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளா் முத்துலஷ்மி உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.

ரயில் வேகனை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு

கும்பகோணத்தில் ரயில் வேகனை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளி மூச்சுத்திணறி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடி சா்க்கரை ஆலைக்கு மகாராஷ்டிர மாநிலம், அகிலியா நகரில் இருந்து 46 ரயி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா் . நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகேயுள்ள ரயில்வே க... மேலும் பார்க்க

பெருமகளூா் பேரூராட்சியில் இன்று மின்நிறுத்தம்

பேராவூரணி அருகே உள்ள வீரக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெருமகளூா் பேரூராட்சி, வீரக்குடி, மணக்காடு, ரெட்டவ... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற 44 தொழிலாளா் சட்டங்க... மேலும் பார்க்க

வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில், தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பி... மேலும் பார்க்க

பைக்-காா் மோதல் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பூதலூா் அருகே கூத்தூா் உப்புக்காட்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. பச்சையப்பன் (65). இவரும் அதே பகுதி காளியம... மேலும் பார்க்க