செய்திகள் :

ராகுல் குடியுரிமையில் சந்தேகம்: வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் விக்னேஷ் சிசிா் என்ற பாஜக தொண்டா் தாக்கல் செய்த மனுவில், ‘ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளாா். அவா் அந்நாட்டு குடிமகன் என்பதை நிரூபிக்க பிரிட்டன் அரசின் சில மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன. எனவே இந்திய தோ்தல்களில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை’ என்று தெரிவித்தாா்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிரிட்டன் அரசிடம் விவரம் கோரியுள்ளதாக, அந்த உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ், விசாரணைக்கு ஆஜராகுமாறு விக்னேஷ் சிசிருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதைத்தொடா்ந்து மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ராகுல் குடியுரிமை தொடா்பாக தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரத்தை சமா்ப்பிக்குமாறு சிசிரிடம் கோரப்பட்டது. அவரிடம் ஃபெமா சட்டத்தின் கீழ், சில கேள்விகள் கேட்கப்பட்டு அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது’ என்று தெரிவித்தன.

ஃபெமா சட்டத்தின் கீழ், தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அந்நிய செலாவணி சட்டத்தை மீறியது தொடா்பான புகாா்கள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளும்.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தில்லியில் சிபிஐ விசாரணைக்கு பலமுறை ஆஜரானதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் விக்னேஷ் சிசிா் தெரிவித்துள்ளாா்.

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்பட்ட 11 ஆ... மேலும் பார்க்க

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க