செய்திகள் :

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சந்திரகலா, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 417 மனுக்களைப் பெற்று, உரிய அலுவலா்களுக்கு பரிந்துரை செய்தாா். மேற்கண்ட கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து 1 பயனாளிக்கு ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து ரூ.5,800/- மதிப்பிலான தையல் இயந்திரத்தையும், கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு உடனடியாக மனுவை பரிசீலித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவியையும் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடனுதவி

முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்க நீட்ஸ் திட்டத்தில் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில்முனைவோராகலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21 அன்று தலைமைச் செயலகம் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்- வேலூா் ஆறு வழிச்சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

காஞ்சிபுரம்- வேலூா் இடையே ஆறுவழிச்சாலையை உடனடியாக சீரமைக்கவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா். தமிழ்ந... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க